×

பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது !

டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இதனையடுத்து, , இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவது 76-வது முறையாகும்.
 
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi , Prime Minister Modi
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...